திங்கள், 8 பிப்ரவரி, 2010

#7. ஆயிரத்தில் ஒருவன் - ஒரு பார்வை


"இந்த படத்த பத்தி விமர்சனம் பண்ணும் போது தன கையில கீ  போர்டும்   மௌசும் இருக்கு என்பதினாலே கைக்கு வந்ததெல்லாம் நெட்ல எழுதறாங்க. சினிமாவ பத்தி விமர்சனம பண்ணுங்க அதை விட்டுட்டு அதுக்கு ஆன பணம் டைம் இதபத்திஎல்லாம் எழுதறது 
தேவை இல்லாதது"   இப்படி திருவாய் மலர்ந்தவர் ஒரு டிவி சானலில் சினிமா விமர்சனம் பண்ணும் ஒரு நடிக்காத நடிகை. 'நீ ஹோட்டலுக்கு வந்தியா தட்ட பாத்து சாப்டுட்டு போய்கினே இரு நீ ஏன் சமையல் ரூம்குள்ள எட்டி பார்குற. நாங்க எப்புடியோ சமைப்போம் அத பத்தி நீ பேசக்கூடாது' என்று வாய கட்டிபோடுவது போல் இருக்கு நடிகையின் அட்வைஸ். நாங்க நூத்தம்பது ரூ பாய அழுது அர நாள் வேஸ்ட் பண்ணி படம் பாத்தோம்னா அது சம்மந்தப்பட்ட எதப்பத்தியும்  எழுதறது எங்க உரிமை.    விமர்சனம் பார்ப்போமா?. 

'யோவ் இது எல்லாம் கப்சா; கேஸ் கீஸ் போட்டு தொலைக்காதீங்க' பட  ஆரம்பத்திலேயே டிஸ்கி போட்டுடறாங்க. எப்பவோ ஊரை விட்டு போன சோழ மன்னர் குல வாரிசையும், சோழ மக்களையும் தேடி ஸ்லீவ்லஸ் ஆட்ன்ட்ரியா, அரை நிஜார் ரீமா மற்றும்  கூலிக்காரன்  கார்த்தி போகும் பயணம் தான் இந்த சினிமாவின் கரு.  கற்காலத்தையும் தர்காலத்தையம் மோதவிட்டு படம் எடுத்து இருகிறார்கள். இதில்  பல காட்சிகள்  இங்கிலீஷ் சினிமால  உருவப்பட்டது என்று அறிந்தவர்கள் கூறுவதையும் நினைவில் கொள்ள வேண்டும். மணிரத்தினத்தின் பல காட்சிகள் இருளில் எடுக்கபட்டிருக்கும், இதில் அவரையும் மிஞ்சி விட்டார்கள். கதை குழப்பம் தவிர இந்த இருட்டு குழப்பமும் படத்தின் பின் பாதியில். 

"ஒங்களுக்கு இதில் வரும் தமிழ் புரியலைன்னா ஒங்களுக்கு தமிழும் தெரியாது வரலாறும் தெரியாதுன்னு அர்த்தம்" மேற்படி, விமர்சன நடிகையின் கருத்து இது. தெரியாம வந்து மாட்டிகிட்டது மட்டும் தெரிந்தது எனக்கு. ஏனோ சிலோன்தமிழைப்பேசவைத்து படத்தின் பின் பகுதியில் குழப்புகிறார்கள். படத்தில் வரும் வன்முறையையும் சிலோன் தமிழையும் சேர்த்துபார்த்தால் பலர் சொல்வது போல் இந்தப்படம் தற்காலத்திய ஸ்ரீ லங்கா போராட்டம் போல் தான் இருக்கிறது. பாவம் டைரக்டர்.பார்த்திபன் சொன்னது போல் சப் டைடி லாவது போட்டு தொலைத்திருக்கலாம்.  ஏன் தமிழர்கள் என்றால் நீக்ரோக்கைவிட கருப்பாக இருப்பார்கள் என்று டைரக்டர் நினைத்தார் என்று தெரியவில்லை. படம் முழுவதும் கரியை  பூசிக்கொண்டு பெரிய கோஷ்டி அலைகிறது.   சோப்பு போட்டு குளிக்காதவன் மாதிரி ராஜா இருக்கும்                                                                                                            போது குடிமக்களின் நிலைமையை கற்பனை செய்து பார்க்கலாம்.  ராஜ குமாரன் சோமாலியா  பையன்  மாதிரி இருக்கிறான் பாவம்.  
ஒரு ராஜாவை இதைவிட கேவலமாக பார்த்தாமாதிரி  நினைவு இல்லை.
மூன்று முறை பார்த்தும் நமக்கு கதை விளங்கவில்லை பாஸ். சுஜாதாவின் வசந்த் சொல்லுவது போல் " ஒரு ரத்தப்பொரியலும் ராவா குவாட்டர் ரம்மும் அடித்தாதான் தலைசுத்தல் சித்த நிக்கும் பாஸ்".

அய்யா தாயே பின்னூட்டம் போடுங்கப்பா



.  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக